பதிவு செய்த நாள்
05
மார்
2018
10:03
திருவாரூர் : குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், மஹாமேரு மகோற்சவம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, யாகசாலை பூஜையுடன், 20ம் ஆண்டு மஹாமேரு மகோற்சவம் துவங்கியது.மாலை 6:00 மணிக்கு தேவி மகாத்மிய பாராயணம் நடந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 8:00 மணிக்கு, லலிதா திரிசதி ஹோமம்; 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மஹாமேரு தேவிக்கு மஹாபிஷேகம்; 9:30 மணிக்கு, கடம் புறப்பாடு; 10:00 மணிக்கு, சுவாமிகள் மற்றும் மஹாமேருவுக்கு கலச அபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, கஜபூஜை, அஸ்வபூஜை, கோபூஜை; இரவு, 7:00 மணிக்கு, கிளி வாகனத்தில் உற்சவர் வீதியுலா; 7:30 மணிக்கு, வித்யா நவாவரண பூஜை; 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.இன்று காலை, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம்; 11:30 மணிக்கு, சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.