Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தத்தாத்ரேயர் கோவில் மகா ... சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் திருக்கல்யாணம் சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 மார்
2018
11:03

பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் புதிய மரத்தேர் கும்பாபிஷேகம், வெள்ளோட்டம் நடந்தது.பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழாவின்,முக்கிய நிகழ்வாக 9 ம் நாளன்று இரவு மின்சார தீப தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இதற்காக பழமை வாய்ந்த தேர் கடந்த வருடம் வரை நான்கு மாடவீதிகளை சுற்றி வந்தது. தொடர்ந்து இந்த வருடம் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட புதிய மரத்தேர்ப்பணி கடந்தசில மாதங்களாக ஆயிர வைசிய சமூக நலச்சங்க நிர்வாக ஆயிர வைசிய சபையின்முயற்சியால் நடந்து பணிகள் நிறைவடைந்துள்ளன.இத்தேர் கும்பாபிஷேக நிகழ்வாக, மார்ச் 2 ல் மாலை 6:00 மணிக்கு மீனாட்சிஅம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடு நிறைவடைந்து, ஆயிர வைசிய சபையினர்ஊர்வலமாக முத்தாலம்மன் கோயிலை அடைந்தனர். அன்று இரவுஅனுக்ஞை, மறுநாள் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், முத்தாலம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. மாலை முதல் காலயாக பூஜையும், நேற்று காலை 2 ம் காலயாக பூஜை, பூர்ணாகுதி நிறைவடைந்து, கடம் புறப்பாடாகியது. பின்னர் காலை 9:45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத, மந்திரம் முழங்க புதிய மரத்தேர் கும்பாபிஷேகம் நடந்து, தீபாராதனைகாண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு மேல் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.நிகழ்ச்சியில் ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி, செயலாளர் ஜெகன்நாதன்,பொருளாளர் சுப்பிரமணியன், டிரஸ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன், பாலசுப்பிரமணியன்மற்றும் ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar