பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின், 186-வது அவதார தினவிழாவையொட்டி, சுவாமிதோப்புக்கு, பேரணி சென்றடைந்தது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவரது 184-வது அவதார தின விழாவான நேற்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து, சுவாமித்தோப்புக்கு பிரமாண்ட பேரணி புறப்பட்டது. பதி நிர்வாகிகள் மாலை சூடி செல்ல, காவிக்கொடி ஏந்திய பக்தர்கள், ’அய்யா, ஹரஹர சிவசிவ’ என்று பாடியவாறு, அய்யாவை பூபல்லக்கில் எடுத்து சென்றனர். கோட்டார், சுசீந்திரம், தென்தாமரை குளம் வழியாக பேரணி சுவாமித்தோப்பை சென்றடைந்தது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.