கன்னிவாடி: மாசி மகத்தை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.மூலவர், ஓம்கார விநாயகருக்கு, வேதி தீர்த்த அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், வாலை, சக்தி அம்மனுக்கு விசேஷ திருமஞ்சன அபிேஷகத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில்களில், மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.