திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவத்தில் பங்கேற்க வந்த பக்தர்கள் கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீரின்றி அவதிக்குள்ளாயினர்.கடந்த சில ஆண்டுகளாக இந்த தெப்ப உற்சவத்தில் கடைசி நான்கு நாட்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.ஆனால் பக்தர்களின் வருகைக்கேற்ப, அடிப்படை வசதி முழுமையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடுவதில்லை.போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து,பாதுகாப்பு பிரச்னை பெரிய அளவில் ஏற்படுவதில்லை. ஆனால், குடிநீர், கழிப்பறை,சுகாதார வசதி முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவதில்லை. நேற்று நிறைவடைந்த உற்சவத்தில் பங்கேற்றவர்களுக்கு 9 இடங்களில் நடத்தப்பட்ட அன்னதானம் காப்பாற்றியது.ஆனால் குடிக்க தண்ணீர் வசதி இல்லை. தண்ணீரை விலைக்கு வாங்கி பக்தர்கள் குடிக்க வேண்டியிருந்தது. முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமப்பட்டனர். கழிப்பறைகளும் "பெயரளவில் இருந்ததால் பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.