பதிவு செய்த நாள்
06
மார்
2018
11:03
அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடந்தது.மன்னீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் காலையில் நடந்தது. இதையடுத்து இரவு, 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தில், மன்னீஸ்வரர் அருந்தவச் செல்வியுடன், சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தார். சுவாமி திருக்கல்யாணம் இரவு, 8:00 மணிக்கு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பின்னர் அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் அமர்ந்த சப்பர திருவீதியுலா, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக இரவு, 10:30 மணிக்கு மீண்டும் கோவிலை அடைந்தது. சுவாமி திருவீதியுலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.