பதிவு செய்த நாள்
06
மார்
2018
11:03
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வே கேட் குபேர கணபதி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில், அப்பாவு நகர் செல்வகணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபி?ஷகம், அலங்காரம் நடந்தது.
* இதேபோல், கிருஷ்ணகிரி சப் - ஜெயில் ரோடு சித்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு, 608 லிட்டர் பால் அபி?ஷகம் நடந்தது. பின், விபூதி அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.