Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கால பைரவர் கோவிலில் சங்கடஹர ... மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகள் தீவிரம் மாரியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

06 மார்
2018
12:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, காட்டம்பட்டி பெருமாள் கோவிலில், 189 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே காட்டம்பட்டி பெருமாள் கோவில் கல்வெட்டை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை சுந்தரம், தேவனாம்பாளையம் வரலாற்று ஆர்வலர் ருத்திரன் ஆய்வு செய்தனர்.கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: காட்டம்பட்டி பெருமாள் கோவில், கருவறைச் சுவரிலும், அர்த்த மண்டபச்சுவரிலும் கோட்டங்களும், அரைத்துாண்களும் கொண்ட அமைப்பு இல்லை.

கல்வெட்டில், மீன் மற்றும் குதிரை உருவமும் புடைப்புச் சிற்பமாக காணப்படுகின்றன. கருவறைச் சுவரிலுள்ள, கல்வெட்டில், கலியுக, மற்றும் சாலிவாகன சகாப்தம் ஆகிய கால குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில், கலியுக ஆண்டு, 4930 என்பதாகவும், சக ஆண்டு, 1751 என்பதாகவும் குறிக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டு குறிப்பும் கிறிஸ்துவ ஆண்டான கி.பி., 1829 ஆண்டோடு பொருந்துகிறது. கால குறிப்புகள் அனைத்தும் பிழையின்றி பொருந்துவதால், 189 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வெட்டு எழுதப்பட்டது உறுதியாகிறது. கல்வெட்டில், காட்டம்பட்டி வரதராயப்பெருமாள் கோவில் எனவும், களந்தையைச் சேர்ந்த ராம நாயக்கன், கி.பி., 1829ல், கோவில், அர்த்த மண்டபத்தை கட்டியதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.

பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் போது, அங்கிருந்த செங்கல் கட்டுமான கோவில்களை கல் கட்டுமானமாக புதுப்பித்துள்ளனர். அவ்வகையில், களந்தையை சேர்ந்த நாயக்கர் தலைவர் ராம நாயக்கர் இக்கோவிலை புதுப்பித்துள்ளார். கோவிலை புதுப்பித்து பராமரித்தால், பழமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar