திருவெண்காடு சுவேதாரன்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2018 05:03
மயிலாடுதுறை: திருவெண்காட்டில் சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரன்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோயிலில் சிவபெருமானின் அகோரமுகமான அகோரமூர்த்தி, தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் நவகிரகங்களில் புதன் பகவான் தனிசன்னதியில் எழு ந்தருளியுள்ளார். பிரம்மா இந்த கோயிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டு இழந்த ஞானத்தை பெற்றார் என்பது ஐதீகம். இங்குள்ள மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை சரனடைந்தால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எமபயம் நீங்கும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க சுவேதாரன்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மா தம் இந்திரப் பெருவிழா நடை பெறுவதுவழக்கம். இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்ட ம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் நான்கு மாடவீதிகளையும் வலம்வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.