பதிவு செய்த நாள்
07
மார்
2018
11:03
பழநி:மாசி திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலுக்கு 2,511 பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பழநி வ.உ.சி.,மன்றம் தலைமையகம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து 2,511 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின்முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன்கோயிலை அடைந்தது. உச்சிக்காலத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் உற்சவசாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, கார்த்திகேயன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், பழநி வ.உ.சி., தலைமை மன்றம் தலைவர் சிவக்கொழுந்து, பொருளாளர் சுந்தர், செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.