பதிவு செய்த நாள்
10
மார்
2018
01:03
கோட்டூர்:கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 7ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது; பக்தர்கள் பூவோடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது. நேற்று, காலை, 8:00 மணிக்கு குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. விரதமிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பூக்குண்டம் இறங்குவது நிறைவடைந்ததும், பெண்கள் பூ அள்ளிக்கொடுத்தனர். காலை, 10:00 மணிக்கு தேர்வடம் பிடித்தல், அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு தேர் திருவீதி உலா உள்ளிட்டவை நடந்தது. இன்று, 10ம் தேதி காலை தேர் நிலை நிறுத்தம், இரவு வாணவேடிக்கை நடக்கிறது. வரும், 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது.