பதிவு செய்த நாள்
10
மார்
2018
02:03
நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், 18 நாட்களில், 53.05 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.தங்கள் வேண்டுதலுக்காக, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை, பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர். கடந்த, 18 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பூர்ண சந்திர ராவ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 53 லட்சத்து, 5,426 ரூபாய் ரொக்கம், 130 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளி மற்றும் 541 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன.