வால்பாறை: லோயர்பாரளை எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.வால்பாறை அடுத்துள்ளது லோயர்பாரளை எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவிலின், 48ம் ஆண்டு திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் பொதுமேலாளர் ரவி ஏற்றினார். விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து, நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.