பதிவு செய்த நாள்
13
மார்
2018
10:03
காளையார்கோவில்: சிவகங்கை அருகே கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23 ல் துவங்கி ஏப்., 3 வரை நடக்கிறது. ஏப்., 1 ல் தேரோட்டம் நடக்கிறது. கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு மார்ச் 23 மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்குகிறது. மார்ச் 24 காலை 6:45 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. தினமும் காலை கேடக விமானத்திலும், மாலை பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்க குதிரை, யானை போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடக்கும். மார்ச் 31 மாலை 5:00 மணிக்கு திருத்தேருக்கு கும்பம் சாத்துதல், இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் அம்மன் புறப்பாடு, ஏப்., 1 காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கும். ஏப்., 2 காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, சந்தனக்குடம், பால்குடம் வைபவம் நடக்கிறது.