பதிவு செய்த நாள்
13
மார்
2018
12:03
மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின், பிரசித்தி பெற்ற கோவில்களில், தீ விபத்துக்களை தடுப்பது குறித்த, பல்வேறு நடவடிக்கைகளை, அறநிலையத் துறை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தீயணைப்பு துறையுடன் இணைந்து, தீயை கட்டுப்படுத்துவது குறித்து, கோவில் ஊழியர்கள், பக்தர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அடுத்த கட்டமாக, தீ விபத்தோ, மின் விபத்தோ ஏற்பட்டால், உடனடியாக, பக்தர்களே மின் இணைப்பை துண்டிப்பது குறித்து, கோவில் வளாக சுவர்களில், மின் வாரியத்தால் விளக்கப்படம் வரையப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அறநிலையத் துறையும், விழிப்புணர்வு பலகைகளை அமைத்து வருகிறது. - நமது நிருபர் -