Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவக்கரை கோவிலில் அம்மனுக்கு ... கன்னிமார் சுவாமி வழிபாடு: ஆடு, கோழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் நடந்த ’காமன் பண்டிகை’; கண் விழித்து ரசித்த மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
01:03

கூடலுார் : கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் நள்ளிரவில் நடந்த ’காமன் பண்டிகை’ திருவிழாவை, மக்கள் கண்விழித்து ரசித்தனர். கூடலுார் பகுதியில், ’காமன் பண்டிகை’ திருவிழா ஆண்டுதோறும் பாரம்பரியம் மாறாமல், நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா, கடந்த மாதம் 20ல் துவங்கியது. தொடர்ந்து, ரதி - மன்மதன் வேடமிட்டவர்கள், தினமும் இரவில் வீடு, வீடாக சென்று ஆடி வந்தனர். இதன், இறுதி நிகழ்வான, ’காமன் பண்டிகை’ நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு ரதி - மன்மதன் சிறப்பு முன்னோட்ட ஆட்ட நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு, விநாயகர் கோவிலிருந்து, ’வில்’ பாலித்து, படத்தேர் ஊர்வலமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.நள்ளிரவு, 1:00 மணிக்கு ரதி - மன்மதன் திருமணம் மற்றும் தொடர்ந்து மொய் விருந்து உபச்சார நிகழ்ச்சி; ரதி - மன்மதன் நடனம், ஊர்வலம் ஆகியவை நடந்தன. 2:00 மணிக்கு மணிக்கு, துாதுவன் வருகை; 3:00 மணிக்கு ரதி - மன்மதனுக்கு வில் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதிகாலை, 3:00 மணிக்கு தட்சன் யாகம் நிகழ்ச்சி; 4:00 மணிக்கு யாகமளிக்க விநாயகர் வருகை; 4:30 மணிக்கு ஆகோதர வீரபுத்திரன் வருகை; 5:00 மணிக்கு தட்சன் வதைபடும் நிகழ்ச்சி; காலன் சங்கிலியுடன் எமதர்மன் வருகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது. அதிகாலை, 5:30 தவத்தை கலைத்த மன்மதனை, சிவனின் நெற்றி கண் மூலம், எரியூட்டும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை, திரளான பெண்கள், குழந்தைகள் நள்ளிரவிலும் கண் விழித்து ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar