பாதயாத்திரை பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2018 01:03
குளித்தலை: தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குளித்தலை பகுதிகளில் இருந்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இரவில் சாலையோரம் நடந்து செல்லும்போது, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், அவர்களின் உடை மற்றும் பைகளில், குளித்தலை இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டினார். இரவில் பாதயாத்திரை செல்லும்போது, ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும் கூட்டமாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கையில் டார்ச் லைட் வைத்திருப்பதோடு, பேக்கில் கட்டாயம் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டி இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.