நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.புதுப்பட்டி, ஆர்.பி.காட்டூரில் பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மாசிமாதம் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 6ல் தொடங்கியது. இன்று காலை, 7:00 மணிக்கு தீ மிதிவிழா நடக்கிறது. பகல், 1:00 மணிக்கு பொங்கல் வைத்தல், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.