விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல், நுாறு கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உட்பட 12 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.