பதிவு செய்த நாள்
15
மார்
2018
12:03
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில், சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்தது. மாசிமாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவிலிலுள்ள, நந்தி பகவானுக்கு, மாலை, 5:00 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால், அபி?ஷகம் நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, நந்திக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஹரிஹரநாதசுவாமி கோவில்தெரு ராமலிங்க சவுடேஸ்வரர் கோவில் என, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், மாசிமாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபி?ஷக, அலங்காரம் நடந்தது.