உடுமலை: பிரதோஷத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் காசி விஸ்வநாதர் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.