பதிவு செய்த நாள்
16
மார்
2018
11:03
பழநி:பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது.பழநி மலைக்கோயிலில் பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்தவிநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. சண்முகர், வள்ளி, தெய்வானை அலங்காரத்தில் சண்முகார்ச்சனை, அபிேஷகம் தீபாராதனை நடந்தது.திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.