பதிவு செய்த நாள்
16
மார்
2018
03:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், 16.20 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. தொண்டை நாட்டு திருமுறை திருத்தலங்கள், 32ல், 18வது திருத்தலமாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா, மார்ச், 21ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர், மு.விஜயன், சரக ஆய்வர், ஜெ.சுரேஷ்குமார், செயல் அலுவலர், வை.முருகேசன் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 16.20 லட்சம் ரூபாய் ரொக்கமும், 7 கிராம் தங்கமும், 136 கிராம் வெள்ளியும் கிடைத்தது.