பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், யதோக்தகாரி பெருமாள், நேற்று காலை, வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரத்தில், வீதியுலா வந்தார்.காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி பிரம்மோற்சவம், 11ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை, மாலையில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் பெருமாள், வீதியுலா வருகிறார். மூன்றாம் நாள் உற்சவமான, 13 காலை, கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை, வேணுகோபாலன் திருக்கோலத்தில், சப்பரத்தில் வீதியுலா வந்தார். மாலை, யாளி வாகனத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்தார். 7ம் நாளான இன்று காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடை பெறுகிறது.