பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
தர்மபுரி: உலக நன்மைக்காக, தர்மபுரி வெளிப்பேட்டைதெரு, அங்காளம்மன் கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில், நேற்று முன்தினம், மாலை, 6:30 மணிக்கு, விக்னேஸ்வர பிரார்த்தனை, வாஸ்து, சாந்தி ஹோமம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. காலை, 12:00 மணிக்கு, கலச புறப்பாடும், மூலாலய அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று காலை, 8:30 மணிக்கு, பால்குட ஊர்வலமும், 10:30 மணி முதல், 12:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பங்குனி அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. சிவன் கோவில் பழைய தேரை அப்புறப்படுத்த வேண்டும். கிருஷ்ணராயபுரம்: சிவன் கோவிலில் உள்ள, பழைய தேரை அப்புறப்படுத்த வேண்டும். கரூர் திருச்சி சாலை, கருப்பத்தூர் நெடுஞ்சாலையோரத்தில், மிகவும் பழமையான சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு, புதிய தேர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே உள்ள பழைய தேர் அப்புறப்படுத்தாமல், அந்த இடத்திலேயே உள்ளது. இதனால், பழைய தேரில் விஷ ஜந்துக்கள் புகுந்து, பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவிலுக்கு முன்புறம், தேர் இருப்பதால், இட நெருக்கடி உள்ளது. பழைய தேரை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை துவக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.