பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியலில், 41.66 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது. காஞ்சியில் பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், 95ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின், கடந்த 2017, பிப்., 9ல் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். கடைசியாக, ஜன., 11ல் எண்ணப்பட்டது. அதன் பின் நேற்று காலை, கோவிலில் உள்ள இரு உண்டியல்கள் திறக்கப்பட்டு, காஞ்சிபுரம் உதவி ஆணையர், மு.விஜயன், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி, ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, சரக ஆய்வர், ஜெ.சுரேஷ்குமார் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 41.66 லட்சம் ரூபாய் ரொக்கம், 123 கிராம் தங்கம், 326 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.