பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
ஆர்.கே.பேட்டை : ஆவணி மாதம், சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள் தயாரிப்பு, தற்போதைய கோடையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காகிதக்கூழ் மற்றும் கிழங்கு மாவால் செய்யப்படும், விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி, தற்போது துவங்கி நடந்து வருகிறது.அச்சில் வார்த்து எடுக்கப்படும் சிலைகளை வெயிலில் காய வைக்க ஏதுவாக, இந்த கோடை, கை கொடுத்து வருகிறது.திறந்தவெளியில், வெயிலில் காய வைக்கப்படும் சிலைகளுக்கு, மழை பாதிப்பு இல்லாததும் தற்போது, சாதகமாக அமைந்துள்ளது.
கடலுார் மாவட்டம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த, சிலை வடிவமைப்பாளர்கள், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் தங்கி, விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். வண்ணம் தீட்டப்படாத அடிப்படை சிலைகளை தற்போது வடிவமைக்கும் கலைஞர்கள், அவற்றை வெயிலில் காய வைத்து, கிடங்குகளில் இருப்பு வைக்கின்றனர். பின், ஆவணி சதுர்த்தி திதிக்கு முன்னதாக, பல வண்ணங்களை கொண்டு, அவற்றுக்கு புது பொலிவுடன் மெருகேற்றுகின்றனர். இதனால் அதிகளவில் சிலைகளை உற்பத்தி செய்ய முடிவதாலும், ஆண்டு முழுவதும் தொழில் வாய்ப்பு கிடைப்பதாலும் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.