பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், கடந்த மாதம் 10ம் தேதி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் அறங்காவலர் குழு சார்பில், சிறப்பு பொது மருத்துவ முகாம் நடத்தினர். அப்போது கண்பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு இலவச கண்கண்ணாடி வழங்கும் விழா நடந்தது. இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் ஆகியோர், பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர். கண் அறுவைசிகிச்சை நிபுணர் சுகாஷ்பிரபாகர், ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீகாந்த், பாபு முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் ஏழுமலை,ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில்150க்கும் மேற்பட்டவர்களுக்கு, இலவச கண்ணாடி வழங்கினர்.