சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா, நாளை (மார்ச் 18) காலை 10:35 மேல் 12:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். திருவிழாவின் 7ம் நாள் மார்ச் 24 காலை 10:31மணிக்கு மேல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம், 10ம் நாள் மார்ச் 27 மாலை 5:00 மணிக்கு பூச்சொரிதல் விழா மற்றும் 11ம் நாளான மார்ச் 28 மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா செய்து வருகிறார். திருவிழா நாட்களில் மாலை கோயில் மண்டபத்தில் இளங்கோ இலக்கிய கழகம் சார்பில் பக்தி இலக்கிய சொற்பொழிவு நடைபெறும்.