பதிவு செய்த நாள்
17
மார்
2018
12:03
பொள்ளாச்சி;பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இன்று அமாவாசை வழிபாடு நடக்கிறது. நாள் முழுவதும் சிறப்பு வழிபாடு நடப்பதால், வெளியூர் பக்தர்கள் முதல் நாள் இரவே ஆனைமலை சென்று, ஓய்வெடுத்து அம்மனை தரிசிக்கின்றனர். அதனால், நேற்று இரவு முதல், இன்று முழுவதும் பொள்ளாச்சியில் இருந்து, மாசாணியம்மன் கோவிலுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாளில் அமாவாசை வருவதால், வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமிருக்கும். ரயில்களிலும் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், ரயில் நேரத்தையொட்டி, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை, உடுமலை, மதுரையில் இருந்தும் ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.