கொடுமுடி வீரநாராயணபெருமாள் கோவிலில் ஜன., 5ம் தேதி சொர்க்கவாசல்திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2012 12:01
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 4ம் தேதி இரவு 7 மணிக்கு மோகனி அலங்காரத்தில், மகாதீபாராதனை நடக்கிறது. 5ம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின், கருடபகவான் வாகனத்தில், பெருமாள், திருக்கொட்டகை பிரவேசம் நடக்கிறது. 6ம் தேதி காலை 7 மணிக்கு பெருமாள், வெள்ளி சேஷ வாகனத்தில் காட்சியளிக்கிறார்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் தனபால் ஆகியோர் செய்கின்றனர்.