பதிவு செய்த நாள்
19
மார்
2018
02:03
கரூர்: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், யாக பூர்ணாஹூதி நாளை நடக்கிறது. கரூர் அருகே, நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இதில், தேர்ந்த வேத விற்பன்னர்கள் மூலம், வரும், 25 முதல், மே, 18 வரை, யாகம் நடக்க உள்ளது. அதற்கான பூர்ணாஹூதி நாளை காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் காலை, 9:30 மணி முதல், மதியம், 12:30 வரை யாகம் நடைபெறும். ஒவ்வொரு ஹோம துவக்கத்திலும், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, நிறைவு நாளில் சதாசிவ பிரமேந்திரருக்கு கலாபிஷேகம், காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ருத்ர ஜெபம், அபிஷேகம் நடக்கிறது. இதில் பங்கேற்க, பக்தர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.