பதிவு செய்த நாள்
20
மார்
2018
12:03
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த, குட்டகம் கிராமத்தில், அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. பங்குனி மாத திங்கட்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கும். அதன்படி, நேற்று பங்குனி முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள், பச்சை மாவிளக்கு எடுத்து, நெய் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பின், அத்தனூர் அம்மன் உற்சவர், சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள், தாசர்களுக்கு, அரிசி படி மற்றும் தங்கள் நிலங்களில் விளைந்த பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர். இதில் புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள், திரளாக கலந்து கொண்டனர்.