மேலுார்;மேலுார் அருகே தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கியது.விழாவையொட்டி மார்ச் 6 முதல் பக்தர்கள்காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர். விழாவின் முதல் நாளான இன்று (மார்ச் 20) அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன்,மந்தை கருப்பண்ண சுவாமி சிலைகள் தும்பைபட்டி பெரிய மந்தைக்கு கொண்டு வரப்படும். நாளை (மார்ச் 21) பெரிய மந்தையில் இருந்து கோயிலுக்கு கொண்டுசெல்லப்படும். தொடர்ந்து மார்ச் 23 பக்தர்கள் சுவாமி சிலைகள், பதுமைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன்செலுத்துவர்.