பதிவு செய்த நாள்
21
மார்
2018
12:03
திருத்தணி: திருத்தணி கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும், ராமநவமி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் சிங்கம் மற்றும் சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராமர் சுவாமி கோவில், திருவாலங்காடு ஒன்றியம், நெடும்பரம் கிராமத்தில் உள்ளது.
இக்கோவிலில், நடந்து வரும் பங்குனி மாத ராமநவமி பிரம்மோற்சவ விழாவையொட்டி, தினமும் காலையில் மூலவருக்கு திருமஞ்சனம் நடந்து வருகிறது. மாலை, 6:00 மணிக்கு, ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம், சிங்க வாகனத்திலும், நேற்று, சேஷ வாகனத்திலும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, மாலை, உற்சவர் யானை வாகனத்திலும், நாளை, சந்திர பிரபையிலும், 23ம் தேதி குதிரை வாகனத்திலும் உற்சவர் மாலையில் வீதியுலா வருகிறார். வரும், 24ம் தேதி, தீர்த்தவாரி, ஊஞ்சல் சேவையும், கொடி இறக்கமும், 25ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, திருக்கல்யாணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைறது.