திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் காளியூட்டம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2018 12:03
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் மார்ச்.22 அன்று பங்குனி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடக்க உள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் நேற்று மாலை 5:00 மணியளவில் திருப்புல்லாணியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள பொக்கனாரேந்தல் புல்லாணி அம்மன் கோயிலில் வழிபாட்டு உத்தரவு மற்றும் பூஜைகளை நிறைவேற்றுவதற்கான அனுமதி கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூலவர் புல்லாணி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பெருமாள் கோயிலில் இருந்து பூசணிக்காய் கொண்டு வரப்பட்டு, எட்டு திசைகளிலும் பிரகார பலி நிகழ்ச்சியும், காளியூட்டமும் நடந்தது. அம்மன் கோயில் அர்ச்சகர் அரியமுத்து பூஜைகளை செய்தார். இரவு 9;00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனைக்கு பின்னர், பொங்கல் வைக்கப்பட்டு, மீண்டும் கோயிலை நோக்கி பட்டாச்சாரியார்களும், பக்தர்கள் சென்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான பேஷ்கார் கண்ணன் செய்திருந்தார்.