பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், பிரதி செவ்வாய்கிழமை மூலவருக்கு, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகாலம் என்பதால், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மாள் கோவிலில், நேற்று, திரளான பெண்கள் மூலவரை தரிசித்தனர்.