கரூர்: கரூர் அடுத்த, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், நேற்று யாகம் நடந்தது. நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், வேத விற்பன்னர்கள் மூலம், மூன்று மாதங்களுக்கு யாகம் நடக்கிறது. நேற்று காலை யாகத்தின் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து, கலாபிஷேகம், காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு ருத்ர ஜெபம், அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.