Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் உண்டியல் வசூல் 1.66 ... காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா விமரிசை காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் உற்சவர் சிலை செய்ததில் மோசடி எப்படி?
எழுத்தின் அளவு:
பழநி முருகன் உற்சவர் சிலை செய்ததில் மோசடி எப்படி?

பதிவு செய்த நாள்

27 மார்
2018
11:03

பழநி: பழநி முருகன் கோவிலுக்கு, 200 கிலோ எடையுடைய, புதிய உற்சவர் சிலை செய்ததில்,முத்தையா ஸ்பதியுடன் சேர்ந்து, 1.31 கோடி ரூபாய் சுருட்டியது எப்படி என, வழக்கில் கைதாகி உள்ள, தமிழக அமைச்சரின் உறவினர், போலீசாரிடம், பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  காஞ்சிபுரம் மாவட்டம்,கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், முத்தையா,77. ஹிந்து சமய அறநிலையத் துறையில், பிரதான ஸ்தபதியாக பணியாற்றினார்.

ரூ.60 கோடி ஒதுக்கீடு: இவரும், தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரான, கோவை, நஞ்சுண்டபுரம், எஸ்.என்.வி., கார்டனைச் சேர்ந்த, கே.கே.ராஜா, 66, என்பவரும், பழனி முருகன் கோவிலுக்கு, உற்சவர் சிலை செய்ததில், 1.31 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.போலீசாரிடம், கே.கே.ராஜா அளித்துள்ள வாக்குமூலம்: திண்டுக்கல் மாவட்டம்,பழநி முருகன் கோவிலில், 2003 - 04ல், அறநிலைய துறையின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றினேன்.

மூலவர் சிலை: சேதமடைந்ததால், அதன் அருகே, 200 கிலோ எடையில், உற்சவர் சிலை செய்து வைப்பது என, முடிவானது. அதற்காக, கோவில் நிதியில் இருந்து, 60 கோடியே, 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தோம்.இப்பொறுப்பை, காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தில்,ஸ்வர்ணம் சிற்பக்கலைக் கூடம் நடத்தி வரும், ஸ்தபதி முத்தையாவிடம் ஒப்படைத்தோம். அவர் கற்சிலை மட்டுமே செய்ய தெரிந்தவர் என்பதால், பஞ்சலோக சிலை செய்யும் ஸ்தபதி ஒருவர் வாயிலாக, சிலையை செய்தார். ஆனால், அந்த சிலையில், வெள்ளி பயன்படுத்தப்படவே இல்லை.தங்கம் உட்பட, நான்கு உலோகங்களை மட்டுமே பயன்படுத்தினோம். சிலை செய்ய, திருத்தணிமுருகன் கோவிலில் இருந்து, 10 கிலோ தங்கம் கடனாக வாங்கப்பட்டது.

சிலையில் திருத்தம்: ஸ்தபதி முத்தையாவுடன் சேர்ந்து, 22 கிலோ செம்பு உள்ளிட்ட உலோகங்களை அதிகமாக சேர்த்து, 221 கிலோவில் சிலை செய்தோம். சிலைக்கு பயன்படுத்த வேண்டிய, 4.2 கிலோ தங்கத்தை சுருட்டினோம். அதன் அப்போதைய மதிப்பு, 24 லட்சம் ரூபாய்.ஆறு மாதத்தில், சிலையின் முகம், கை உள்ளிட்ட பாகங்கள்கறுத்து விட்டன. இதனால், சிலையில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என, ஒரு அறையில் பூட்டி வைத்தோம்.அந்த சிலையை, 2004ல் இருந்து, தற்போது வரை, 14 ஆண்டுகளாக பயன்படுத்தவில்லை. சிலை செய்ய, ஒதுக்கிய நிதி மற்றும் வட்டியுடன் சேர்த்து, 1.31 கோடி ரூபாய் சுருட்டியதாக, எங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பார்த்து செய்யுங்க!: சிலை மோசடி புகாரில் கைதாகி உள்ள, கே.கே.ராஜா, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்துள்ளார். அவருக்கு, ஊட்டியில் சொந்தமாக, எஸ்டேட் உள்ளது. தமிழக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினரான இவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நெருங்கியதும், ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு, பல இடங்களிலும் இருந்து, அழுத்தம் வந்துள்ளது.அவர் கூறுகையில், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், பார்த்து செய்யுங்க என்றனர். வழக்கின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றேன். இந்த வழக்கில், மேலும், ஏழு முக்கிய புள்ளிகளை கைது செய்ய உள்ளோம், என்றார்.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar