Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை சொர்க்க வாசல் திறப்பு: கோட்டையில் பணிகள் துரிதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
11:01

ஈரோடு:ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில், பெருமாள் கோவில்களில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல், இரவு 10 மணி வரை, கோவிலில் பெருமாள் மோகினி அலங்கார காட்சி நடக்கிறது. நாளை அதிகாலை 3க்கு கஸ்தூரி அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதிகாலை 4.30க்கு சொர்க்க வாசல் திறப்பும், ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக, கோவிலில் சொர்க்க வாசல் திறப்புக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடந்தது. பக்தர்கள் வரிசையில் நிற்க தடுப்பு கம்பு அமைக்கும் பணி, கோவிலை சுத்தப்படுத்துதல், வண்ண விளக்குகளால் கோவிலை அலங்கரித்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ரவி செய்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனம், செருப்பு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar