Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எக்கலா தேவி அம்மன் கோயில் விழா ... ராகவேந்திரர் கோவிலில் ராமருக்கு பட்டாபிஷேகம் ராகவேந்திரர் கோவிலில் ராமருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆட்டையாம்பட்டியில் இருந்து திருமலை திருப்பதிக்கு 18 ஆண்டுகளாக பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
ஆட்டையாம்பட்டியில் இருந்து திருமலை திருப்பதிக்கு 18 ஆண்டுகளாக பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
12:04

ஆட்டையாம்பட்டி:  ஆட்டையாம்பட்டியில் இருந்து, திருமலை திருப்பதிக்கு, 18 ஆண்டுகளாக கண்ணையன் என்ற ராமானுஜதாசர் தலைமையில், ஸ்ரீ பரந்தாமன் பக்தர்கள் குழுவினர், பாதயாத்திரை சென்று வருகின்றனர்.    திருப்பதிக்கு, பாதயாத்திரை செல்வது குறித்து, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி மணியாரங்காடு பகுதியை சேர்ந்த கண்ணையன், 58, கூறியதாவது:   

கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், குடும்பச்சூழலால் ஒரு வேளை சாப்பாடுக்கே, வழியின்றி வறுமையில் வாடினேன். அப்போது, என் வீட்டுக்கு வந்த தாசர் ஒருவர், குடும்பத்துடன் நடைபயணமாக திருப்பதி சென்று வந்தால், கஷ்டங்கள் தீரும் என்றார். அவர் கூறியபடி, ஆட்டையாம்பட்டியில் இருந்து குடும்பத்துடன் நடந்தே, திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை, எனக்கு பசி என்பதே கிடையாது. தினமும், 10 பேருக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு வசதியாக இருக்கிறேன். என்னை போல் வேதனைப்படும் அன்பர்களை, திருப்பதிக்கு நடைபயணமாக அழைத்துச் சென்று வருகிறேன். அவர்களும் கஷ்டங்களில் இருந்து, விடுபட்டுள்ளனர். நடைபயணம் செல்வதற்கு முன், பெத்தாம்பட்டி சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, இருமுடி கட்டிக்கொண்டு நடைபயணத்தை துவக்குவோம்.

அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, 4:00 மணி முதல், 10:30 வரை நடைபயணம் செய்து, அருகில் உள்ள கோவில், மடம் அல்லது தாசர் வீடுகளில் தங்கி இளைப்பாறி மீண்டும் மாலை, 5:00 மணிக்கு பயணத்தை துவக்கி இரவு, 11:00 மணி வரை நடப்போம். ஒரு நாளில், 35 முதல், 40 கி.மீ., துாரம் பாதயாத்திரை சென்று, 10 நாளில் திருப்பதி திருமலைக்கு சென்று, சுவாமி தரிசனம் முடித்து, ரயில் மூலம் சேலத்துக்கு வந்து விடுவோம். பாதயாத்திரை செல்ல துவங்கியது முதல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டதில்லை.  
இவ்வாறு அவர் கூறினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar