பரமக்குடி சித்திரைத் திருவிழா ஏப்.27ல் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2018 03:04
பரமக்குடி, பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத்திருவிழா ஏப். 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. ஏப்.18 இரவு காப்புக்கட்டுதல், மறுநாள் காலை 10:00 மணிக்கு மேல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்படும். தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வருவர். முக்கிய நிகழ்வாக ஏப். 26 ல் விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலமும், மறுநாள் மதியம் 12:00 முதல் 1:00 மணிக்குள் திருக்கல்யாணமும் நடக்கும். ஏப். 28ல் காலை 10:30 மணிக்கு மேல் சித்திரைத் தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். மறுநாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.