பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
03:04
மல்லசமுத்திரம்: வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முடிவடைந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், வரலாற்று சிறப்புமிக்க சுப்ரமணியம் எனும் பெயரில், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமாவாசை பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வர். பங்குனி உத்திரத்தில், தேர்த்திருவிழா ஒருவாரம் நடப்பது வழக்கம். அதன்படி, மார்ச், 26ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 30ல், பங்குனி உத்திரத்தன்று, மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு, மலையை சுற்றி, பக்தர்கள் இழுத்து வந்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்வேறு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். இறுதி நாளான நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சத்தாபரணம் நடந்தது. 4:00 மணிக்கு, அடிவாரத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு, மலையை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, மனமுருக வேண்டிக்கொண்டனர்.