பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
03:04
ஓசூர்: ஓசூர் அருகே, மத்திகிரி மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா நேற்று துவங்கியது. ஓசூர் ஐ.டி.ஐ., அம்மன் நகர் அருகே உள்ள, மத்திகிரி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று துவங்கியது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தில் இருந்து, கோவிலுக்கு, மேள, தாளங்கள் முழங்க தேர் கொண்டு வரப்பட்டது. பல்வேறு கிராம மக்கள் சார்பில், மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில், இன்று காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, தின்னூர் கிராம மக்கள் சார்பில், அலகு குத்தும் நிகழ்ச்சியும், மதியம், 2:45 மணிக்கு, அம்மன் உற்சவம், மாலை, 6:00 மணிக்கு, நவதி பகுதி மக்கள் சார்பில், சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது. நாளை இரவு, 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும், பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. இதையொட்டி, மத்திகிரி, பழைய மத்திகிரி, மிடிகிரிப்பள்ளி, நவதி, குருபட்டி, அம்மன் நகர், தின்னூர், அந்திவாடி, கர்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு, ஊர்வலமாக பல்லக்கு கொண்டு வரப்படுகிறது.