பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
05:04
சென்னை: சிவானந்தர் இசைத்திருவிழா ஒரு வருடாந்திர விழா. இதை ஒருங்கிணைத்து எடுத்து நடத்துவது ” தி டெம்பிள் ஆப் பைன் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல்‘, (டிபிஎப்ஏ) சிவானாந்தா ட்ரஸ்ட் மற்றும் அன்னலட்சுமி ரெஸ்டாரன்ட். இதன் கொள்கை டிபிஎப்ஏ நிறுவனர் சுவாமி சாந்தானந்த் சரஸ்வதி அறிவுரைப்படி, கலை என்பது மனிதத் தன்மையை மேலோங்கச் செய்வதும், தூய்மையையும் வளமையையும் மேன்மையடைய செய்வதும். டிபிஎப்ஏ நிறுவனர் சுவாமி சாந்தானந்த் சரஸ்வதியின் 84வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதல் நாள் கச்சேரி, வரும் ஏப்.8, சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. விழாவில் கீழ்க்கண்ட கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
ஸ்வாதகம்: பாரம்பரியமிக்க இந்திய வரவேற்பு நடனம்
உஸ்தாத் உஸ்மான் கான்: புனேயை சேர்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர்
ஓஎஸ் அருண்: உலகப்புகழ்பெற்ற தென்னிந்திய கர்நாடக இசைக்கலைஞர்
கலையை அனைவருக்கும் எடுத்துச்சொல்லும் குறிக்கோளுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அழைப்பிதழுக்கு,
அன்னலட்சுமி ரெஸ்டாரென்ட்,
எண்18/3, ருக்மணி லட்சுமிபதி ரோடு,
முதல் மாடி, சிகப்பி ஆச்சி பில்டிங்,
(ஏர்இந்தியா அலுவலகம் பின்புறம், ராஜா முத்தையா ஹால் அருகே)
எழும்பூர், சென்னை- 600 008
இசைத் திருவிழா நடைபெறும் நாள் ஏப்.8, ஞாயிறு,
நேரம்; மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 வரை
இடம்: மியூசிக் அகடமி, சென்னை