திருநீர்மலையில் நாச்சியார் கோலத்தில் நீர்வண்ண பெருமாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2018 10:04
திருநீர்மலை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா ஐந்தாம் நாள் திருவிழாவில் நீர்வண்ண பெருமாள் நாச்சியார் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கும். இந்தாண்டும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில், ஐந்தாம் நாளில் நீர்வண்ண பெருமாள் நாச்சியார் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.