சிங்கம்புணரி: பிரான்மலையில் சித்தர் அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.மலைச்சேர்வார் குடும்பத்தை சேர்ந்த சித்தர் அருணாச்சலேஸ்வரர் கோயில் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி ஏப்.2ம் தேதி 6 கால பூஜையாக யாகபூஜைகள் தொடங்கியது. நேற்று ஏப்.5 ம் தேதி காலை 10:00 மணிக்கு கோயில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 10:42 மணிக்கு மூலஸ்தானம் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அருணாச்சல சுவாமி தர்மபீட டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி மணிவண்ணன் செய்திருந்தார். விழாவில் மதுரை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.