பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
12:04
ஈரோடு: பொங்கல் வைக்க, ஊர்வலமாக பொங்கல் பானையுடன் சென்ற, பெரிய மாரியம்மன் நில மீட்பு குழுவினர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தில், பொங்கல் வைக்கும் உரிமை கோரியும், 80 அடி திட்ட சாலையை நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள வழக்குகளை அரசு விரைந்து முடிக்க வலியுறுத்தியும் பொங்கல் வைக்கும் அறப்போராட்டம், பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நில மீட்பு இயக்க நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் ஒன்று கூடினர். அங்கிருந்து, ஊர்வலமாக சென்ற அவர்களை, மணிக்கூண்டு அருகே போலீசார் கைது செய்தனர். பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கினர். நீல மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பொங்கல் வைக்கும் பானையுடன், பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 355 பெண்கள் உள்பட, 610 பேர் கைது செய்யப்பட்டனர்.