மதுரை, : மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மஹாலில் ஏப்.,8ல் ஸ்ரீருத்ர மஹா யக்ஞம் நடக்கிறது.காலை 6:00 மணிக்கு குரு வந்தனம், கலச ஸ்தாபனம்; 7:00 மணிக்கு மஹன்யாசம்; 8:30 மணிக்கு ருத்ரஜபம், ருத்ர ஹோமம்; 11:15 மணிக்கு வஸோர்தாரா; காலை 11:30 மணிக்கு தீபாராதனை, அன்ன பிரசாதம் நடைபெறும்.உலக நன்மைக்காகவும், கோயில்களில் ஏற்பட்ட தீவிபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதிருக்கவும், இந்த தீவிபத்துக்களினால் உலக நன்மைக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க ருத்ர மஹா யக்ஞம் நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கமிட்டி செயலர் எஸ்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.