காளையார்கோவில்: காளையார்கோவிலில் உள்ள ஆத்திமரத்து காளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காளையார்கோவில் ஆத்தா ஊரணி கரையோரம் அமைந்துள்ள ஆத்திமரத்து காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்த ஏப்.,1ல் அனுக்ஞை பூஜைகள் துவங்கின. மறுநாள் கணபதி ேஹாமம், விநாயகர் பூஜை நடைபெற்றது. ஏப்., 3 ல் முதல்கால யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 5: 45 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சொர்ண காளீஸ்வர குருக்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. காளையார்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.